பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!
Feb 04, 2021 205 views Posted By : YarlSri TV
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸுக்கு எதிரான நமது தேசிய முயற்சியில் இது மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஒவ்வொரு தடுப்பூசியும் நம் அனைவரையும் சற்று பாதுகாப்பானதாக்குகிறது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என கூறினார்.
நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் மேலும் 1,322பேர் இறந்துள்ளனர், மேலும் 19,202 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 109,335 ஆகவும், மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 3,871,825 ஆகவும் கொண்டு வருகிறது.
பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலான அரசாங்க தரவுகளின்படி, மொத்தம் 10,021,471 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 498,962 பேருக்கு இரண்டாவது டோஸ் அளவையும் பெற்றுள்ளனர்.
வாரத்தின் தொடக்கத்தில் இருந்து புள்ளிவிபரங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட 10பேரில் ஒன்பது பேரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்கள் முதல் அளவையும் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 15 மில்லியனுக்கு முதல் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் தற்போது இலக்கு வைத்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
19 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
19 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
19 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
19 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
19 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
19 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago