நாட்டு மக்கள், ஜனாதிபதி, பிரதமருக்கு சர்வமதத் தலைவர்கள் ஆசிர்வாதம்
Feb 04, 2021 273 views Posted By : YarlSri TV
நாட்டு மக்கள், ஜனாதிபதி, பிரதமருக்கு சர்வமதத் தலைவர்கள் ஆசிர்வாதம்
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின் அனைத்து இன, மத, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களை வழி நடத்துகின்ற நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் மும்மணிகளின் ஆசிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று சர்வ மதத் தலைவர்கள் தமது பூரண ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவானது இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக ஆனால் சகல சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய இந்த பொன்னான நன்னாளில் சகல இன, மத, மொழி மக்களும் ஒற்றுமையாகவும் பேதங்களை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று உறுதிபூண்டு எமது எதிர்கால நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை காலமும் ஏதாவது அத்தகைய மனக்கசப்புகள் சிறுசிறு சஞ்சலங்கள் இருந்தாலும் அவற்றை இன்றுடன் இல்லாதொழித்து இனிவரும் காலத்தில் புதிய வாழ்விலே ஆரம்பிப்போம் என உறுதி பூண்டு இன்றைய நாளை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என சர்வமதத்தலைவர்கள் ஆன புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலாநிதி அனுராக் காசா நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, வண பிதா கலாநிதி குருகுல ஆராய்ச்சி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
23 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
23 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago