மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி தைப்பூசம் கொண்டாடப்பட்டது!
Jan 30, 2021 202 views Posted By : YarlSri TV
மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி தைப்பூசம் கொண்டாடப்பட்டது!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசியாவிலும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 5,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,933 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 16 பேர் பலியான நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மலேசிய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா தொற்று எதிரொலியால் மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
தைப்பூசத் தினத்தன்று பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுத பாணி கோயில், சிலாங்கூரிலுள்ள பத்துமலைத் திருத்தலம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
கொரோனா நோய்த்தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வீட்டிலிருந்தபடியே தைப்பூசத்தை இணையத்தில் காணுமாறு மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால், மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் புடைசூழ மேள தாளத்துடன் வெள்ளி ரத ஊர்வலம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் நோக்கிச் செல்லும். ஒவ்வோர் ஆண்டும் இந்த வெள்ளி ரத ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்க்கம்.
இந்த ஆண்டு முதல்முறையாக பக்தர்கள் இன்றி அமைதியான முறையில் வெள்ளி ரதம் பத்துமலைத் திருத்தலம் சென்றடைந்தது.
இதேபோல், பினாங்கிலும் கடும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு மத்தியில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் இல்லாமல் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடுவது வரலாற்றிலேயே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago