Skip to main content

மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது!

Jan 29, 2021 189 views Posted By : YarlSri TV
Image

மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது! 

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.



கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த 27ம் திகதி மதியம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் தீவிரமடைந்துள்ளதுடன், கணவர் கூர்மையான ஆயுதத்தினால் மனைவியின் கழுத்தில் தாக்கியுள்ளார்.



இந்த சம்பவம் குறித்து சந்தேக நபர் அவரின் சகோதரர் மூலம் நேற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை