மனித உரிமைகள் இலங்கையின் கலாசாரத்தின் ஒரு பகுதி- பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது – அவர் தனது ஆணையை மீறிவிட்டார்- பாலித கோஹன
Feb 01, 2021 177 views Posted By : YarlSri TV
மனித உரிமைகள் இலங்கையின் கலாசாரத்தின் ஒரு பகுதி- பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது – அவர் தனது ஆணையை மீறிவிட்டார்- பாலித கோஹன
பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன, மனித உரிமை ஆணையாளர் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்சேவரிற்கான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
கேள்வி- இலங்கை தொடர்பான முகன்மைக் குழு இலங்கையை இன்னொரு தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குமாறு இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் -அது உள்ளடக்கத்தை பொறுத்த விடயம். பெரும்பான்மையான மக்களினது விருப்பத்திற்கு மாறான அரசமைப்பிற்கு முரணான தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும் என முகன்மை குழு எதிர்பார்க்க முடியாது.
கடந்த தேர்தலின் போது மக்கள் தாங்கள் எதற்காக வாக்களிக்கின்றனர் என்பது குறித்து நன்கு அறிந்திருந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழு அனைத்து நாடுகளுக்கும் உதவுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. முகன்மை குழுக்கள் உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.மீறல்கள் என தெரிவிக்கப்படுபவற்றிற்காக நாடு ஒன்றின் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை.
மனித உரிமைகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி –உள்ளாந்தவை என்பதால் நாங்கள் வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இல்லாமல் அதற்கு தீர்வைக் காண்போம்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
10 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago