Skip to main content

கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முக்கிய அறிவித்தல்

Feb 01, 2021 205 views Posted By : YarlSri TV
Image

கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முக்கிய அறிவித்தல் 

கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.



கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசா லைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசா லைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை