அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க த.தே.கூ. தீர்மானம்
Feb 01, 2021 191 views Posted By : YarlSri TV
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க த.தே.கூ. தீர்மானம்
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அவர்களது நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அவ்விடத்தில் முந்தைய நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானவை என்பதைக் குறிப்பிடுகின்றன.
வடமாகாண சபை உறுப்பினர் முன்னாள் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் த.தே.கூட்டமைப்பு பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்த பின் இந்த சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர்.
மேலும் பெருமளவு இந்து வணக்கஸ்தலங்கள் அழிக்கப் பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago