மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
Feb 01, 2021 189 views Posted By : YarlSri TV
மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை பலாங்கொட நீதிவான் ஜெயருவன் திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ரூபா 1 லட்சம் பெறுமதியான இரு பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரான ஆசிரியை கடந்த சனிக்கிழமை(30) 15 மாணவர்களை அழைத்துக்கொண்டு வளவ ஆற்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது 16 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.
மாயமான மாணவியின் உடல் இரு மணித்தியாலங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது ஆசிரியை பாடசாலை அதிபருக்கோ வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ சுற்றுலா குறித்து அறிவிக்கவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago