தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்!
Jan 26, 2021 183 views Posted By : YarlSri TV
தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் குவிப்பு: பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் பவாட் அலாம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
தென்னாபிரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
கராச்சி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 58 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், யாசிர் ஷா விக்கெட்டுகளையும் நயுமான் அலி மற்றும் ஷாயின் ஷா அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது இம்ரான் பட் 9 ஓட்டங்களுடனும் அபிட் அலி 4 ஓட்டங்களுடனும் பாபர் அசாம் 7 ஓட்டங்களுடனும் ஷாயின் ஷா அப்ரிடி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ராபாடா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளுக்காக பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago