Skip to main content

திருகோணமலையில் விபச்சார விடுதி நடத்தி வந்த நான்கு பேர் விளக்கமறியலில்

Jan 28, 2021 205 views Posted By : YarlSri TV
Image

திருகோணமலையில் விபச்சார விடுதி நடத்தி வந்த நான்கு பேர் விளக்கமறியலில் 

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த நான்கு பேரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (28) உத்தரவிட்டார்.



கல்கமுவ, தம்புள்ளை மற்றும் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 31, 34 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும் ஆண் ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



சந்தேக நபர்கள் திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் எதிரே மஜாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடாத்துவதாக திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை