விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!
Jan 27, 2021 208 views Posted By : YarlSri TV
விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் ட்ராக்டர் பேரணியை தொடங்கியதே வன்முறைக்கு வித்திட்டதாக கூறினார்.
வன்முறையில் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி. மாநில எல்லைகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி போன்ற பகுதிகளில் விவசாயிகள் பேரணிக்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகள் டெல்லி இந்தியா கேட், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததால் பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
இதன்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago