Skip to main content

சுகிர்தராஜனின் நினைவேந்தல் நேற்று கிழக்கில் அனுஷ்டிப்பு

Jan 25, 2021 219 views Posted By : YarlSri TV
Image

சுகிர்தராஜனின் நினைவேந்தல் நேற்று கிழக்கில் அனுஷ்டிப்பு 

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது.



முன்னதாக இந்நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் கொவிட் - 19 நிலமை காரணமாக இது மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.



கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.



சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்பு;களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி நினைவுச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் இடம்பெற்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை