Skip to main content

திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

Jan 20, 2021 214 views Posted By : YarlSri TV
Image

திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு! 

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



கண்டி வீதியில், மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரிகளது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.



குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை நகர சபையால் நிதி வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டிருந்தது.



எனினும், திடீரென நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், மக்கள் அன்றாடம் நடமாடும் பகுதிகளில் குறித்த வியாபாரத்தினை முன்னெடுத்தால் மாத்திரமே போதிய அளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியுமெனவும் நகர சபையினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் வியாபாரத்தை முன்னெடுத்தால் தமக்கு நஷ்டம் ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சினைக்குத் தகுந்த முடிவினைப் பெற்றுத்தருமாறு வீதியோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை