Skip to main content

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!

Jan 22, 2021 194 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு! 

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது  மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை ) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.



இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டமுனை மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.



இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்தநிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.



இதேவேளை  அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை