கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!
Jan 22, 2021 194 views Posted By : YarlSri TV
கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை ) உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டமுனை மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்தநிலையில் உயிரிழந்த முதியவரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அரசடி கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago