Skip to main content

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Jan 22, 2021 241 views Posted By : YarlSri TV
Image

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 50ஆயிரத்து 187பேர் உயிரிழந்துள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில், மொத்தமாக வைரஸ் தொற்றினால் 19இலட்சத்து 72ஆயிரத்து 345பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 366பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 395பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 24பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 482பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து ஆயிரத்து 134பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை