மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
Jan 18, 2021 255 views Posted By : YarlSri TV
மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மசூதி கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட இந்திய, இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தனிப்பூா் மசூதி திட்டப் பணிகளை குடியரசு தின கொண்டாட்டங்களுடன் தொடங்க ஐஐசிஎஃப் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அயோத்தி மாவட்ட வாரியத்திடம் மசூதி கட்டுமான திட்டத்துக்கு அனுமதி பெற விண்ணப்பித்து, மண் பரிசோதனை பணிகளை தொடங்குவதன் மூலம் திட்டப் பணிகளை முறைப்படி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனிப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 15 ஆயிரம் சதுர அடியில் மசூதி கட்டப்படும் என்றும், இந்த மசூதி பாபா் மசூதியின் அளவில் கட்டப்படும் என்றும் ஐஐசிஎஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago