Skip to main content

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Jan 17, 2021 257 views Posted By : YarlSri TV
Image

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி! 

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு



கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பங்கேற்றனர்.



முதல்கட்டமாக நேற்று மட்டும் ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை