நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
Jan 20, 2021 239 views Posted By : YarlSri TV
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் சற்று தாமதமாக நடத்தப்பட்டன. அதில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, 2021-ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளைக் குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டங்களில் ஏதாவது மாற்றம் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் 2021-ம் ஆண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
ஜே.இ.இ. தேர்வை பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும். ஆனால் கூடுதலாக விருப்பத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 90 வினாக்கள் கேட்கப்படும் என்றும், அதில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 வினாக்கள் வீதம் 75 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீட் தேர்வு தொடர்பாக வினாக்கள் கேட்கப்படும் முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த தேர்வும் ஜே.இ.இ. தேர்வு போல விருப்பத் தேர்வுகளாக நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ் மிருசுவில் பகுதியை வந்தடைந்தது!
-
முதல்முறையாக பெரிய ஸ்கோர் அடித்தும்.. கங்காரு அணியிடம் தோற்ற இந்திய மகளிர் அணி!
-
141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago