Skip to main content

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை!

Jan 06, 2021 190 views Posted By : YarlSri TV
Image

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை! 

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுமாறாக பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.



மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பேரூந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள், உணவக உரிமையாளர்கள், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பயணிகள் என பல தரப்பட்டவர்களிடம் எழுமாறாக பீ.சி.ஆர்.பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன.



இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி றோய் பீரிஸ், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை