2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்!
Jan 17, 2021 205 views Posted By : YarlSri TV
2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்!
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. என்ன நடக்கிறது என சக வீரர்கள் சுதாரிப்பதற்குள் அந்த 2 வீரர்களும் அவர்களை குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.
இதையடுத்து அந்த 2 வீரர்களும், தங்களது சக வீரர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது தெரியாத நிலையில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளே ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக கூறி இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையில் தலைநகர் காபூலில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
இதேபோல் ஹெல்மண்ட் மாகாணத்தில் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்ததில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.
இந்த 2 குண்டு வெடிப்புகளுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago