ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!
Jan 14, 2021 282 views Posted By : YarlSri TV
ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தை மாத பிறப்பையொட்டி, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்கள், தங்கள் குடும்பத்தாருடன் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக கபடி, வலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அத்துடன் காவலர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு பிரத்யேக போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின், இறுதியில் போட்டியில் வென்ற சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு, எஸ்.பி. தங்கதுரை பரிசுகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஏடிஎஸ்பி, ஆயுதப்படை டிஎஸ்பி சேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago