தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!
Jan 12, 2021 228 views Posted By : YarlSri TV
தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!
கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மனிதர்கள் வாழ்க்கையில் நாம் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது’ என்று கூறினார்.
ஒரு மாநில அரசே கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago