Skip to main content

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

Jan 11, 2021 228 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா! 

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தவிர்க்கமுடியாத காரணங்களினால் கடந்த நான்காம் திகதி முதல் நேற்று வரை வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று முதல் வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.



இதேவேளை அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை