கொரோனா நோயாளர் தப்பியோடியதன் எதிரொலி – பலர் தனிமைப்படுத்தலில்!
Dec 28, 2020 268 views Posted By : YarlSri TV
கொரோனா நோயாளர் தப்பியோடியதன் எதிரொலி – பலர் தனிமைப்படுத்தலில்!
சபுகஸ்கந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச்சென்றதை அடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தப்பிச்சென்ற நபர் சப்புஸ்கந்தையின் மாகொல வடக்கில் அவரது காதலி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஆறு வீடுகளைச் சேர்ந்த 22 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட போது அல்லது சிகிச்சையளிக்கப்படும்போது தப்பியோடியவர்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்
போதைப்பொருளிற்கு அடிமையான சப்புஸ்கந்தையைச் சேர்ந்த 22 வயதுடைய நிமேஸ் மதுசாங்க என்ற குறித்த சந்தேகநபர், சமீபத்தில் மஹர சிறையிலிருந்து விடுதலையானவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சோதனை முடிவுகளில் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் காணாமல்போயிருந்தார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சப்புஸ்கந்தையின் மாகொல வடக்கில் அவரது காதலி வீட்டில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago