Skip to main content

முல்லைத்தீவு, வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்!

Dec 20, 2020 207 views Posted By : YarlSri TV
Image

முல்லைத்தீவு, வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்! 

முல்லைத்தீவு, வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.



வாகனத்தைச் செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.



இந்த விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.



வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன், அவரது மூன்று வயது மகளான ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19) இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை