கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்!
Dec 29, 2020 227 views Posted By : YarlSri TV
கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்!
கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனை அதிமுகவினரே வழங்குவதாகவும், அதனை தடுக்க கோரியும் திமுக சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி, பொள்ளாச்சி எம்.பி சண்முக சுந்தரம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, உள்ளே நுழைய முயன்றவர்களை, ஆட்சியர் அலுவலக வாயிலை அடைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் தமிழக அரசையும், அமைச்சர் வேலுமணியையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர், திமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்றும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கவும் அறிவுறுத்தினர்.
அதனை தொடர்ந்து, வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய திமுக நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், அமைச்சர் வேலுமணி உத்திரவு காரணமாக அதிமுகவினர் டோக்கன் அச்சடித்து விற்பனை செய்வதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை தடுக்காவிட்டால் நாளை கோவை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago