Skip to main content

கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை - அமித்‌ஷா திறந்து வைத்தார்!

Dec 29, 2020 227 views Posted By : YarlSri TV
Image

கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை - அமித்‌ஷா திறந்து வைத்தார்! 

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோ‌ஷா கோட்லா மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.



இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று திறந்து வைத்தார்.



அப்போது அமித்‌ஷா பேசுகையில், ‘கிரிக்கெட்டில் 2 வகையான பேர் உள்ளனர். ஒன்று, வீரர்கள். இன்னொன்று விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்கள். விளையாடுவதற்கான சூழலை உருவாக்குபவர்களின் பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. அதற்காகவே நாங்கள் இந்த சிலையை திறந்து வைக்கிறோம்’ என தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, கவுதம் காம்பிர் எம்.பி. மற்றும் அருண்ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை