Skip to main content

இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொண்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

Dec 15, 2020 247 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொண்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு! 

இந்தியாவில் முற்றிலும் கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ ஃபிரிகேற் (17A FRIGATE) ஏவுகணை தாங்கிக் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.



கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில், முப்படைத் தலைமைத் தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் கப்பலை வழங்கிவைத்தார்.



இந்திய மதிப்பில் 19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் மூன்று ஃபிரிகேற் கப்பல்களைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.



நவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் கப்பல் வான், கடல் மற்றும் ஆழ்கடலில் இருந்து வரும் முக்கோண அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறன் வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் சென்சர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இதன் ஒப்படைப்பு நிகழ்வில் உரையாற்றிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், குறித்த ஏவுகணை தாங்கிக் கப்பல்களை கடற்படையுடன் இணைத்தால், கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு தன்னிறைவை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை