யாழ். பல்கலையின் விஞ்ஞான பீடத்தில் இறுதி வருட சிறப்புக்கற்கை மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம் !
Dec 15, 2020 230 views Posted By : YarlSri TV
யாழ். பல்கலையின் விஞ்ஞான பீடத்தில் இறுதி வருட சிறப்புக்கற்கை மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பம் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான, கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. ‘நாட்டில் எழுந்துள்ள கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாணவர்களின் நன்மை கருதி, சுகாதாரப் பகுதியினரின் அனுமதியுடன், தேவையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான செயற்றிட்டப்பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மாவட்டத்துக்கு வெளியில் இருந்து தனிப்பட்ட பயண ஒழுங்குகளுடன் அழைத்து வரப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த அனைவருக்கும், நேற்று முன்தினம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் இறுதியாண்டு ஆய்வுக்கான செயற்றிட்டப் பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதியில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதற்கும், மாணவர்களை மீள விடுதிக்குக் கொண்டு செல்வதற்குமான பயண ஏற்பாடுகள் பல்கலைக் கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்கலைக் கழக கொரோனா தடுப்பு – முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான சுகாதாரக் குழுவின் அறிவுறுத்தல்களுக்கமைய வகுப்புகளும், செயன்முறை அமர்வுகளும் இடம்பெறவுள்ளன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago