சகோதர படுகொலையை நிறுத்தினால் பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன்- டக்ளஸ் !
Dec 18, 2020 255 views Posted By : YarlSri TV
சகோதர படுகொலையை நிறுத்தினால் பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன்- டக்ளஸ் !
சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள். அதன்பின் பிரபாகரனுடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஆயுத போராட்டத்தின் ஊடாகதான் பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அந்த வகையில் எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம்.
துரதிஸ்டவசமாக அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் என சொல்லப்பட்டவர்கள் அதனை சரியாக முன்னெடுக்கவில்லை.
நாங்கள் இப்போது அந்த ஆயுத போராட்டத்தை கைவிட்டு, தேசிய நல்லிணக்கம் என்ற ஆயுதத்தினை இன்று முன்னெடுத்திருக்கின்றோம்.
அந்த தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்கள் மாத்திரமல்ல, வடக்கு மகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து தருவோம்.
முன்னர் பிரபாகரனுடன் பேசுமாறு இங்குள்ளவர்கள் கேட்ட இடத்தில், முதலில் சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறியிருந்தேன். அதன் பின்னர் நான் கதைக்க தயாராக இருக்கின்றேன் என்றேன். ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல எல்லாம் முடிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
24 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
24 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago