Skip to main content

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையில் மற்றுமொரு உடன்படிக்கை கையெழுத்தானது!

Dec 16, 2020 271 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையில் மற்றுமொரு உடன்படிக்கை கையெழுத்தானது! 

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான அடிப்படை மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க இராணுவ அமைச்சர் கிறிஸ்டோபர் மில்லருடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இரு நாடுகளுக்கு இடையிலான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது எதிர்கால இராணுவ ஒத்துழைப்பில் சக்திவாய்ந்த சமிக்ஞையாக கருதப்படுகிறது” எனத் தெரிவித்தார்.



அமெரிக்காவின் முக்கிய இராணுவ கூட்டாளியாக இந்தியாவை 2016ல் அமெரிக்கா அறிவித்தது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் பல ஒப்பந்தங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கையெழுத்தாகின.



இதன் தொடர்ச்சியாக இருநாட்டு இராணுவ தொழில்நுட்பம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை அக்டோபரில் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை