Skip to main content

விவசாயிகளின் தோள்கள் வாயிலாக தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர் – மோடி!

Dec 16, 2020 250 views Posted By : YarlSri TV
Image

விவசாயிகளின் தோள்கள் வாயிலாக தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர் – மோடி! 

விவசாயிகளின் தோள்கள் வாயிலாக  தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க  எதிர்கட்சியினர் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



அத்துடன் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பொய்யான தகவல்களை கூறி அவர்களை குழப்பும் சூழ்ச்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக அவர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.



குஜராதில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் அரசியல் செய்வற்காக  விவசாயிகளை பலிகடா ஆக்குகின்றனர்.



தவறான தகவல்களை பரப்பி அரசியல் செய்ய நினைப்பவர்களை  விபரமான விவசாயிகள் அடையாளம் கண்டு கொள்வர். விவசாயிகளின் தோள்கள் வாயிலாக  தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க  எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அதை விவசாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய சுதந்திரம் வேண்டும் என  நீண்ட காலமாகவே விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சீர்திருத்தங்களை இப்போது எதிர்க்கும் எதிர்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது ஆதரித்து பேசியுள்ளன.



அவர்கள் அதிகாரித்தில் இருந்தபோது எடுக்க தவறிய முடிவைத்தான்நாங்கள் இப்போது எடுத்துள்ளோம். புதிய சட்டங்கள் குறித்து  தவறான தகவல்களை பரப்பி  விவசாயிகளை குழப்பவும், அச்சுறுத்தவும், எதிர்கட்சிகள் சூழ்ச்சி செய்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை