ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!
Dec 09, 2020 263 views Posted By : YarlSri TV
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இதுகுறித்து கூறுகையில், ’84 வயதாகும் போப்பாண்டவர், தலைநகரான பாக்தாத் மற்றும் உர், ஆபிரகாமுடன் இணைக்கப்பட்ட ஒரு நகரத்தையும், நினிவே சமவெளிகளில் எர்பில், மொசூல் மற்றும் காராகோஷ் ஆகிய இடங்களையும் பார்வையிடுவார். மார்ச் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இந்த பயணம் அமையவுள்ளது.
ஈராக் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கத்தோலிக்க திருச்சபையின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணம் உலகின் தொற்று நோயியல் சூழலில் உலகுக்கான சமாதான செய்தியாக அமையும்’ என கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது வெளிநாட்டு வருகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக அமையும் அவரது முதல் பயணம் இதுவாகும்.
ஈராக் அரசாங்கம் இதுவொரு வரலாற்று நிகழ்வு என்று விபரித்தது. இது ஈராக் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் சமாதான செய்தியை குறிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ், போப் பிரான்சிஸை ஜூலை 2019இல் ஈராக்கிற்கு வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைத்தார். இது பல வருட மோதல்களுக்குப் பிறகு நாடு குணமடைய உதவும் என்று நம்புகிறார்.
2003ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பு மற்றும் 2014இல் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை இஸ்லாமிய அரசு கைப்பற்றிய பின்னர் குறுங்குழுவாத போரைத் தொடர்ந்து சில லட்சம் கிறிஸ்தவர்கள் ஈராக்கில் எஞ்சியுள்ளனர்.
பிரான்சிஸ் இந்த ஆண்டு ஒரு பயணத்தை மேற்கொள்வார் என்று நம்பினார். ஆனால் அவரது திட்டங்கள் முதலில் பாதுகாப்புக் காரணங்களாலும் பின்னர் கொரோனா வைரஸாலும் ஒத்திவைக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டில், மறைந்த போப் இரண்டாம் ஜான் பால், பண்டைய ஈராக்கிய நகரமான ஊரைப் பார்வையிட விரும்பினார். பாரம்பரியமாக கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் யூத மதம் ஆகிய மூன்று பெரிய ஏகத்துவ மதங்களின் தந்தை ஆபிரகாமின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஈராக், எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கான மூன்று படிகளின் யாத்திரையின் முதல் கட்டமாக இது இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அப்போதைய ஈராக் தலைவரான சதாம் ஹூசைனின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை முறிந்தது.இதனால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago