Skip to main content

தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது -விஜய பிரபாகரன்!

Dec 13, 2020 250 views Posted By : YarlSri TV
Image

தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது -விஜய பிரபாகரன்! 

தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.



தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது.



 சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், “சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை; தற்போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது .3-வது அணி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் தைரியமாக அமைப்போம். உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை” என்று விமர்சித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை