கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்!
Dec 11, 2020 208 views Posted By : YarlSri TV
கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்!
ஆப்பிரிக்க நாடான கானாவில் கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் தேர்தல் நடந்தது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள் இடம் பெறவில்லை. சமூக ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சிகள் வழியேதான் பிரசாரங்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நானா அகுபோ அடோவுக்கும், முன்னாள் அதிபர் ஜான் மகாமாவுக்கும் இடையே நீயா, நானா என்கிற வகையில் மிக பலத்த போட்டி நிலவியது. இப்போது, பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அவருக்கு 51.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. ஜான் மகாமாவுக்கு 47.4 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. இரண்டாவது முறையாக கானாவில் நானா அகுபோ அடோ அதிபர் ஆவதை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில் நானா அகுபோ அடோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பின்னடைவு ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago