Skip to main content

யாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு!

Dec 04, 2020 216 views Posted By : YarlSri TV
Image

யாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு! 

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.



நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வகுமார் (வயது-37) என்பவரே இன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.



கடற்றொழிலுக்காக இன்று பிற்பகல் கடலுக்குச் சென்ற ஊரி கடற்றொழிலாளர்கள் கடலில் சடலத்தை அவதானித்து அதுதொடர்பாக கிராம சேவையாளர் மயூரனுக்கு தகவல் கொடுத்தனர்.



அவர் மூலம் சுழிபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்களும் காரைநகர் ஊரி கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் சென்று சடலத்தை கரைக்குக் கொண்டுவந்தனர்.



இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை