கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
Dec 03, 2020 240 views Posted By : YarlSri TV
கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 10 ஆயிரத்து 140 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேநேரம், நேற்று கம்பஹா மாவட்டத்தில் 188 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 98 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை கண்டியில் 27 தொற்றாளர்களும் குருநாகலையில் 24 தொற்றாளர்களும் இரத்தினபுரியில் 24 தொற்றாளர்களும் மற்றும் புத்தளத்தில் 29 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago