Skip to main content

புரவி புயல் : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

Dec 03, 2020 217 views Posted By : YarlSri TV
Image

புரவி புயல் : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை! 

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘புரவி’ புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி இன்று (வியாழக்கிழமை) காலை நகரவுள்ளது.



அத்துடன் பாம்பன்-கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை இன்று நள்ளிரவுக்கு மேல் கடக்கவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் அதேவேளை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வீழ்ச்சி வரை பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



அத்துடன் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு கேரளப் பகுதி, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டா் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 5-ஆம் திகதிவரை செல்ல வேண்டாம் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை