Skip to main content

மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படுமா? மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இராணுவத்தளபதி!

Dec 07, 2020 223 views Posted By : YarlSri TV
Image

மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படுமா? மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இராணுவத்தளபதி! 

பண்டிகை காலங்களில் மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படாது ஆனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நோயாளிகள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.



தனிமைப்படுத்தல் குறித்து கொழும்பில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதே எப்போதும் நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.



பண்டிகை காலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் நிலைமை மீளாய்வு செய்யப்படும் என்றும் தேவையின்றி ஒன்று கூடுவதை தடுக்க மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



நோயாளிகள் இருக்கும் இடங்களையும் மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்கும் இடங்களிலும் கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அந்த பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவோம் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.



முழு பொலிஸ் பகுதிகளையும் முழுமையாக முடக்குவதை விட, அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை தனிமைப்படுத்த அதிகாரிகள் இப்போது முடிவு செய்துள்ளனர்.



அடுத்த வாரத்திற்குள் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.



இருப்பினும் இது பொதுமக்களின் கைகளில் இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், நோயாளிகளை அடையாளம் காண நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை