இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!
Nov 30, 2020 326 views Posted By : YarlSri TV
இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் அரசியல் விவகாரங்கள் மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவை சென்றடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago