கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!
Nov 30, 2020 228 views Posted By : YarlSri TV
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் இன்று தயாரிடம் பணம் கேட்டதாகவும் தாய் பனம் கொடுக்க மறுத்துள்ளதால் கோபமடைந்து தனது அம்மம்மாவின் வீட்டிற்கு சென்று அங்கு அறைக்குள் தூக்கில் தொங்கியுள்ளார்.மகன் கோபமடைந்ததை புரிந்து கொண்ட தாய் தனது தாய் வீட்டிற்கு மகனை தேடி போயுள்ளார்.அப்போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து குறித்த இளைஞனை மீட்டு வரணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.இதில் வரணி கரம்பைக் குறிச்சியை சேர்ந்த மகேந்திரம் தினோஜன் (வயது – 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago