அல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!
Nov 29, 2020 222 views Posted By : YarlSri TV
அல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த (22 வயது) இளைஞனொருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த இளைஞரின் தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், நேற்று (சனிக்கிழமை) மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.
அதனால் தாயார், அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரது மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இன்று பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு
-
அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் பதவி ஏற்பு விழா ஜனவரி மாதம் நடக்க இருந்தாலும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டன!
-
நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago