புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு!
Dec 01, 2020 256 views Posted By : YarlSri TV
புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக பினராயி விஜயன் அறிவிப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மீட்புக் குழுவினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்யுமென தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு துறைமுகங்களில் முதலாம் இலக்க புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago