Skip to main content

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது!

Dec 01, 2020 305 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது! 

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்



உலக அளவில் கொரோனா பாதிப்பில் பாகிஸ்தான் 28-வது இடத்தில் உள்ளது.



பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது.



இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 2,839 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,98,024 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 40 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 025 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 3.41 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை