யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் இரண்டு நாட்களுக்கு பூட்டு!
Nov 26, 2020 197 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் இரண்டு நாட்களுக்கு பூட்டு!
யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெற மாட்டாது என யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது நேற்று இரவு பெய்த கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
வெள்ள நீரை அகற்றும் செயற்பாட்டில் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பொது மக்களுக்கான சேவை எதுவும் இடம்பெற மாட்டாது என அறிவித்துள்ளார்.வெள்ளம் உட்புகுந்த குறித்த அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டிருந்தனர்.
குறித்த அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது எதிர்பார்க்காத ஒரு விடயம் எனவும் எனினும் உடனடியாக பொறியியலாளர் அழைக்கப்பட்டு குறித்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள சேதம்உடனடியாகதிருத்தி அமைப்படவுள்ளதாவும்ம் குறித்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எனினும் அலுவலகம் பூராகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் அலுவலகம் முழுவதும் வெள்ளம் காணப்படுவதன் காரணமாக பொது மக்களுக்கான சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசியமான சேவைகளை மாத்திரம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago