Skip to main content

யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் வெள்ளத்தில் மூழ்கியது!

Nov 26, 2020 260 views Posted By : YarlSri TV
Image

யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் வெள்ளத்தில் மூழ்கியது! 

யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகம் நேற்று இரவு  பெய்த கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ள நீரால் மூழ்கிய து 



வெள்ளம்  உட்புகுந்த குறித்து அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டனர்.



குறித்து அலுவலகத்தினை பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர்



குறித்த அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது எதிர்பார்க்காத ஒரு விடயம் எனவும் எனினும் உடனடியாக பொறியியலாளர் அழைக்கப்பட்டு குறித்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள  சேதம்உடனடியாகதிருத்தி  அமைப்படவுள்ளது



எனினும் குறித்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எனினும் அலுவலகம் பூராகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை