Skip to main content

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!

Nov 29, 2020 264 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.! 

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.



கிளிநொச்சி மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மாவட்டச் செயலர் தலைமையில் நாளை உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது.அதற்கு இடையில் கிளிநொச்சியில் அண்மையில் வயோதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.



அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியினரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளன.இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நாளை திங்கட்கிழமை இடம்பெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பாடசாலைகளை இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை