வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Nov 29, 2020 228 views Posted By : YarlSri TV
வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேருராட்சிக்கு உட்பட்ட கக்கன்ஜு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேவதானப்பட்டிக்கு வருகை தந்தார். இதனை அறிந்த கக்கன்ஜி காலனியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரை சூழ்ந்துகொண்டு, தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துக்தர கோரி மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மனுக்களை பெற்றுகொண்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்துசென்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago