Skip to main content

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

Nov 29, 2020 200 views Posted By : YarlSri TV
Image

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை! 

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள மாற்றம் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!



தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதன் காரணமாக ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



மேலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.



மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை