Skip to main content

பாகிஸ்தான் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது!

Nov 28, 2020 233 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தான் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது! 

உலகம் முழுவதுமே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, விளையாட்டுப் போட்டிகள் ஏதும் முன்போல நடத்த முடியவில்லை. அப்படி நடத்தப்படும் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.



கிரிக்கெட் போட்டிகள் பல ஒத்திவைக்கப்பட்டன. ஐபிஎல் போட்டியே மார்ச் மாதம் நடக்க வேண்டியது ஆறேழு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டு அதுவும் வெளிநாட்டில் நடத்தப்பட்டது.



இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக போட்டிகளை ஆர்வத்துடன் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். அதற்காக வீரர்களுக்குக் கடுமையான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதலைச் செயல்முறை படுத்துகிறது அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள். ஆனால், அதை மீறி சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன.



 நியூசிலாந்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவிருக்கின்றன. அதற்காக நியூசிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.



இந்தத் தொடரில் திட்டமிட்டப்படி போட்டிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகத்தையும் பலர் எழுப்பி வருகின்றனர்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை